Monday 21 October 2013

இந்தியாவின் முதலாம் இசுலாமிய வங்கி!



சேரமான் பினான்சியல் சர்வீசஸ் லிமிட்டட்;

இந்தியாவின் முதலாம் இசுலாமிய வங்கி வெற்றி பாதையில் முன்னேறுகிறது!

இந்திய இசுலாமியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த வட்டி இல்லாத இசுலாமிய வங்கி சேவைகளுக்கான வங்கி ஒன்றிற்க்கு மத்திய அரசும்,இந்திய ரிசர்வ் வங்கியும் அணுமதி அளித்ததனை தொடர்ந்து கேரள அரசின் ஆதரவோடு தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் வட்டி இல்லா வங்கியான ‘சேரமான் பினான்சியல் சர்வீசஸ் லிமிடட்’ (சி.எப்.எஸ்.எல்) இசுலாமிய மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றதுடன்.வளைகுடா நாடுகளிலும் மிகுந்த வரவேற்ப்பினை பெற்று வருகிறது. இவ்வங்கியில் முதலீடுகள் செய்வதற்க்கு அரபு நாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

‘ஷரியத்’ சட்டங்கள் கூறும் பொருளாதார தத்துவஙகளை முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு இந்தியன் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் ‘சேரமான் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடட்’ உடன் வர்த்தக உறவு கொள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் உள்ள சில வங்கிகளும்,தன காரிய அமைப்புகளும்,தனியார் முதலீட்டாளர்களும் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.

‘சி.எப்.எஸ்.எல்’ -ன் நிர்வாக இயக்குனர் டாக்டர்.பி.முஹம்மத் அலி(கல்பாஃர்) அவர்களின் தலைமையில் துபாய் நகரில் ‘சேரமான் பினான்சியல் சர்வீசஸ் லிமிடட்’ இன் முதலீட்டாளருக்கு வங்கி குறித்து அறிமுகப்படுத்தும் பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.

அரபு நாடுகளில்,வியாபாரம் மற்றும் விற்பனை துறைகளில் ஈடுபடும் வளைகுடா வாழ் இந்தியர்கள் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு வங்கியில் முதலீடு செய்வதற்க்கும் வர்த்தக உறவுவுகள் வைத்துக் கொள்வதற்கும் விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர். இந்தியர்கள் மட்டும் அல்லாது பெருமளவு அரபு வியாபாரிகளும் சேரமான் பினான்சியல் சர்வீசஸ் லிமிட்டடில் வர்த்தக உறவு வைத்துக் கொள்ளவும் வங்கியின் பங்குகளில் முதலீட்டாளர்களாக சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஐக்கிய அரபு அமிரகம் மட்டும் அல்லாது மற்ற இதர வளைகுடா நாடுகளிலும் வங்கியை அறிமுகப்படுத்தும் விழாக்கள் நடத்தப்பட இருக்கிறது.ஒமான் அரசுடன் தொடர்புடைய சில நிறுவனங்கள் வட்டி இல்லாத ரீதியில் செயலாற்றும் சேரமான் பினான்சியல் சர்விசஸ் உடன் வர்த்தக உறவில் இணைவதற்க்கு விருப்பம் தெரிவித்து இருக்கிறது.வளைகுடா நாடுகளில் இருந்து பெருமளவினான முதலீடுகள் பெறுவதற்கான திட்டம் மிக பெரும் வெற்றி திட்டமாக மாறி இருக்கிறது என்று வங்கியின் தலைமை நிர்வாகி டாக்டர்.முஹம்மது அலி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்தியாவில்,தமிழ் நாடு,மற்றும் வட இந்திய மாநிலங்களில் இருந்தும் வங்கிகளில் முதலீடுகள் செய்வதற்க்கு சில அமைப்புகள் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் வளர்ந்து வரும் வேளையில் வரும் டிசம்பர் மாதத்தில் வங்கியின் முதல் ‘செயல் திட்டம் ‘ செயலாற்ற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பதினைந்திற்க்கும் மேற்பட்ட மிக பெரும் செயல் திட்டங்கள் ‘சி.எப்.எஸ்.எல்’ இடம் இருப்பதாக டாக்டர்.பி.முஹம்மது அலி தெரிவிக்கிறார்.

2009 ஆம் ஆண்டு அச்சுதானந்தன் அரசு அறிமுகப்படுத்திய ‘அல் பரக்கா பினான்சியல் சர்வீசஸ் லிமிட்டட்’ என்ற நிறுவனமே தற்போது பெயரை மாற்றி ‘சேரமான் பினான்சியல் சர்வீசஸ் லிமிட்டட்’ஆக செயல் பட்டு வருகிறது. இதர பொதுவுடமை வங்கிகளுடன் இணைந்து செயல்பட மத்திய ரிசர்வ் வங்கி அணுமதியும் அளித்து இருக்கிறது.

ஆயிரம் கோடி ரூபாய்கள் தொடக்க மூலதன முதலீடாக கொண்டு செயல்படும் வங்கியில் ஆக மொத்தம் 11 சதவிகிதம் கேரள மாநில தொழில் வளர்சி நிறுவனத்தின் பங்காகவும்,
பாக்கி உள்ள தொகைகளை தனியார் முதலீட்டாளர்களிடமிருந்தும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடமிருந்தும் சேகரிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.இவ்வாறு பெறப்படும் தொகைகள் கேரள மாநில தொழில் வளர்ச்சி திட்டங்களிலும், மாநிலத்தின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் திட்டங்களிலும்,வக்பு நிலங்களை மேம்படுத்தும் திட்டங்களிலும்,சிறு தொழில் திட்டங்களிலும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு அதனில் இருந்து கிடைக்கும் லாப/நஷ்ட கணக்குகளை அணுசரித்து முதலீட்டாளர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும்.

இத்தகைய திட்டங்களுக்கு பணம் கொடுப்பதோடு மட்டும் அல்லாது திட்டங்களை நல்ல முறையில் கொண்டு செல்ல முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் மற்றும் பொருளாதார ஆலோசனைகளை வழங்கவும் திட்டமிட்டு இருப்பதாக வங்கியின் நிர்வாக இயக்குனர் ஏ.பி.எம். ஹனீஷ் ஐ.ஏ.எஸ் தெரிவித்தார்.
’ஷரியத்’ தடை செய்திருக்கும் தொழில் துறை திட்டங்களிலோ அல்லது விற்பனை கூடங்களிலேயோ ‘சி.எப்.எஸ்.எல் ‘ பணத்தினை முதலீடு செய்யாது என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

வட்டி லாபத்தை ஷரியத்திற்கு எதிராக கருதுவதால் இந்திய இசுலாமியர்கள் பொதுவுடமை வங்கிகளிலும்,பொது துறை நிறுவனங்களிலும் பெருமளவிளான முதலீடுகளை செய்ய தயங்குகிறார்கள் அல்லது அத்தைகைய நிறுவனங்களில் முதலீடுகளை செய்ய ஆர்வமும் காட்டுவதில்லை.அவ்வாறு விட்டு நிற்கும் இசுலாமிய முதலீட்டாளர்களை கவரும் விதத்தில் கேரள அரசின் துனையோடு தொடங்கப்பட்ட சேரமான் பினான்சியல் சர்வீசஸ் லிமிட்டட்-ற்க்கு இந்திய இசுலாமியர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றிருப்பதோடு வங்கியினை வெற்றி பாதையில் கொண்டு செல்வார்கள் என எதிர்ப்பாக்கப்படுகிறது.இவ்வாறு கிடைக்கும் பணத்தினை நாட்டின் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் வளர்ச்சி திட்டங்களுக்கும் செலவிட திட்டமிட்டு இருப்பதாகவும் வங்கியின் நிர்வாக இயக்குனர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலதிக விபரங்களுக்கு; http://www.cheraman.com/

நன்றி: 'சுவனப்பிரியன்' வலைத்தளம்.

Tuesday 20 August 2013

இஸ்லாமிய வங்கி....!



வட்டிக்கு பணம் தருவதையும் வட்டிக்கு பணம் வாங்குவதையும் இஸ்லாமிய சட்டமான ‘ஷரியத்’ பாவப்பட்ட செயலாக விலக்கி வைத்து தடை செய்துள்ளது.  இதையும் மீறி, காலப்போக்குக்கு ஏற்ப சிலர் பண கொடுக்கல்-வாங்கலில் வட்டியை அனுமதித்து வருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.

எனினும், பெரும்பாலான இஸ்லாமியர்கள் தங்களது சேமிப்புக்கு வங்கிகள் அளிக்கும் சொற்ப வட்டியையும் பெற்றுக்கொள்ள மறுத்து வருகின்றனர்.  இவ்வகையில், அரபு நாடுகளில் வாழும் கேரள மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம்களின் கேரள கணக்குகளில் கோரப்படாத தொகையாக சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் முடங்கிக் கிடப்பதாக தெரியவருகிறது.

இந்நிலையில், வட்டி என்ற நடைமுறையே இல்லாத ‘ஷரியத்’ வங்கி முறையை கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என வளைகுடா நாடுகளில் வாழும் கேரள மாநில முஸ்லிம்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கையை கேரள மாநில அரசு மத்திய ரிசர்வ் வங்கியிடம் முன் மொழிந்தது. இதனையடுத்து, கேரள மாநில அரசின் சார்பில் நடத்தப்படும் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் வட்டியில்லா ‘ஷரியத்’ வங்கியை தொடங்க ரிசர்வ் வங்கி இன்று அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக இன்று மும்பையில் பேட்டியளித்த ரிசர்வ் வங்கி செய்தி தொடர்பாளர் அல்பனா கில்லாவாலா, ‘இஸ்லாமிய நிதி கொள்கைகளின்படி, வங்கியமைப்பை சாராத நிதி நிறுவனத்தை தொடங்க கேரள மாநில தொழில் மேம்பாட்டு நிறுவனத்துக்கு மத்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது’ என்று கூறினார்.

இஸ்லாமிய வங்கிமுறை கொள்கைகளின் படி, முதலீட்டாளர்களுக்கு வட்டி வழங்கப்பட மாட்டாது. கடன் பெறுபவர்களிடமும் வட்டி வசூலிக்கப்பட மாட்டாது.  வங்கியில் தேங்கும் பணத்தை வைத்து பங்கு வர்த்தகம், பாதுகாப்பு பத்திரங்கள், மது, புகையிலை மற்றும் சூதாட்டம் தொடர்பான தொழில்கள் தவிர இதர வகை தொழில் முனையோர் கடன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : மாலைமலர்

தமிழகத்தில் திரையிடப்படாத படத்தை பார்க்க ஒரு கூட்டம் கேரளம் செல்கின்றது.. வட்டி இல்லா வங்கிக் கணக்கைத் திறக்க நம் மக்கள் கேரளம் செல்வார்களா என்று பொறுத்திருந்து பார்போம்.

Saturday 27 July 2013

அமைதிக்கு அருமருந்து

.அமைதிக்கு அருமருந்து

பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட இஸ்லாத்தின் கோட்பாடுகளில், இஸ்லாத்தின் ஐந்து கட்டாயக் கடமைகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டுஉலகில் மனித இனம் வாழ்வதற்குப்  பொருளாதாரம் எவ்வளவு முக்கியம் என்பதை இறைவனே உலகுக்குப் பறைசாற்றும் ஒரு ஜீவாதாரக் கொள்கை ஜகாத்.  படைத்த இறைவனின் சாம்ராஜ்யத்தின் பொருளாதாரக் கொள்கைதான் ஜகாத்.  இஸ்லாமிய அமைச்சரவையின் பொருளாதாரத்  திட்டக் கமிஷனின் தலைமை இடம் ஜகாத்துக்குத்தான்.  ஜகாத் என்பது பக்தர்கள் செலுத்தும் காணிக்கையல்ல; கடமை.  ஜகாத் என்பது ஒரு சடங்கு அல்ல ; சட்டம்.

தனது செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை எழைகளுக்கு வருடா வருடம் வரியாகப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டுமென்கிற சட்டம் சமுதாயத்தில் பாய்கிறபோது கொடுப்பவருக்கும் துன்பமில்லை. அதைப் பெறுபவர் அந்த நிதியைக் கொண்டு தங்களின் ஏழ்மை வாழ்வை செம்மையாக்கிக் கொள்ள இயலும் என்பதே இதன் பொருளாதாரத் தத்துவம். ஒரு பணக்காரரின் வருமானத்திலிருந்து ஒரு சிறு அளவு,  ஜகாத்தாக ஏழைக்குச் சென்று சேர்கிற பொழுது பணக்காரருக்கு ஏற்படும் இழப்பைவிட ஏழைக்குக் கிடைக்கும் இலாபமே அதிகமாகும். இதனால் ஒட்டுமொத்த சமுதாயத்தில் சமத்துவம்    சம்மணம்  போட்டு அமரும்.

ஜகாத் என்பது ஒரு பெரிய ஏரியின் வரப்புகள் நீர் மிகுதியால் உடைப்பெடுத்துக் கொள்ளாமல்  வெட்டிவிடப்பட்ட ஒரு சிறு வாய்க்கால். அதிலிருந்து ஏழைகளின் வயல்களை நோக்கி உற்பத்திக்கான நீர் ஓடிக்கொண்டே இருக்கும் . அதே நேரம் இறைவனின் அருள் என்கிற ரஹ்மத்தும், பரக்கத்தும் பெருமழையாய்ப் பெய்து ஏரியை நிரப்பிக் கொண்டே இருக்கும். ஆண்டுதோறும் ஜகாத்  செலுத்தப் படவேண்டுமென்கிற  விதி,  இந்த ஆன்மீகப் பணியின் மூலமான சமுதாய வளர்ச்சி   தொய்வில்லாமல் நடைபெற வழி வகுக்கிறது.  சொர்க்கத்தில் நமக்கென இடத்தைப் பதிவு செய்யும் நன்மைக் கட்டணமாக ஜகாத் இறைவனிடம் சென்று செயல்படுகிறது.

‘ஆசைகளின் மூட்டைஎன வர்ணிக்கப்படும்  மனிதனிடம் இயல்பாகவே பொருள்  மோகம் இருக்கின்றது. பொருளாதாரத்தைத் தேடி, திரட்டி, அதைப் பார்த்து மகிழ்வடையும் மனநிலை காணப்படுகின்றது.  தொடர்ந்து நியமப்படி ஜகாத் வழங்கிவரும் ஒருவனிடம், பொருளாதாரத்தின் மீதான வெறித்தனம் தணிந்து, அதிலே ஓரளவு தாராளத் தன்மை ஏற்படும். இது ஏற்பட்டு விட்டால், நியாயமான முறையில் பணம் திரட்டும் பக்குவம் ஏற்பட்டுவிடும். நீதியையும் நேர்மையையும் நெறிப்படுத்தும் மாபெரும் சக்தி பெற்றது ஜகாத்.

தான் தேடிய செல்வத்தை, தான் கூட அனுபவிக்காமல், அதனைப் பார்த்துப் பார்த்து ரசிக்கும் தன்மை பலரிடம் காணப்படுகின்றது. தனக்கே செலவழிக்காதவன் பிறருக்கு எப்படிக் கொடுப்பான்? இறைவனின் ஆணையை ஏற்று, இந்தக் கட்டாய தர்மத்தைச் செய்பவனிடம் கஞ்சத்தனம் விடுபட்டுவிடும். அதன் பின் அவன் தாராளத் தன்மையுடன் உபரியான தர்மங்களைச் செய்பவனாக மாறிவிடுவான். கஞ்சத்தனம் இஸ்லாத்தில் கண்டிக்கப்பட்ட குற்றமாகும்.

தனக்குக் கிடைத்தது அடுத்தவனுக்குக் கிடைத்துவிடக் கூடாது, அல்லது அடுத்தவனுக்குக் கிடைத்தது அவனிடமிருந்து அழிந்துவிட வேண்டும் என்ற உணர்வே பொறாமையாகும்.  ஜகாத்  கொடுப்பவன் தன்னைப் போல் அடுத்தவனும் பொருளாதார முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று விரும்புவதால், அவனிடமிருந்து இயல்பாகவே பொறாமைக் குணம் பாதியிலேயே கழன்றுபோய் விடுகிறது. ஏழைகள்கூட செல்வந்தர்கள் மீது பொறாமை கொள்ளலாம். அதே செல்வந்தர்கள் ஜகாத்  மூலம் தமக்கு உதவும் போது தமக்கு உதவுபவர்கள் மீது அவர்களுக்கு பொறாமை ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே, ஜகாத் கொடுப்பவர், எடுப்பவர் இருவரிடமும் பொறாமை என்ற தீய குணம் ஏற்படுவதைத் தவிர்க்கின்றது.

பணம் படைத்தவர்களில் பலர்  சமூக உணர்வு அற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் ஜகாத் வழங்குபவர்களாக மாறும்போது சமூகத்தில் நலிவடைந்தவர்களின் வாழ்க்கை நிலவரத்தைப் புரிந்துகொள்ளவும், அவர்கள் மீது அக்கறை  காட்டவும் வாய்ப்பு ஏற்படுகின்றது.  இவர்கள் ஏழைகளின் மீது  அக்கறை செலுத்தும் போது,  இயல்பாக சமூக உணர்வு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு நோக்கும் போது ஜகாத் பல்வேறு விதத்திலும் மனித மனங்களைத் தூய்மைப்படுத்தி நல்ல மாற்றங்களை விளை விக்கின்றது.
அத்துடன் நேற்றைக்குப் பணக்காரன் இன்றைக்குப் பிச்சைக்காரன் ஆகும்படி அவனது செல்வங்கள் வன்முறையால் பிடுங்கப் படும் வரலாறுகளை ஜகாத் தடுத்து நிறுத்துகிறது. ஒரு ஆன்மீக உடன்பாட்டில் இறையச்சத்தில் -  ஏழைகளுக்குஅவர்களுக்குரிய செல்வம் பணக்காரர்களால் பாசத்துடன் பந்தி வைத்துப் பரிமாறப் படுகிறது.  அரசியல் சரித்திரத்தில் ஆன்மீக மேம்பாட்டில் அமைதியை  தழைக்கச் செய்யும் அருமருந்தே ஜகாத்.

(சகோதரர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் ‘அதிரை நிருபர்’ வலைத்தளத்தில் எழுதிவரும் ‘இஸ்லாமியப் பொருளாதாரம்’ எனும் கட்டுரைத் தொடரின் அண்மைப் பதிவிலிருந்து தொகுக்கப் பெற்ற கருத்துக் கோவை.)

Wednesday 24 July 2013

வட்டியை இஸ்லாம் தடுப்பது ஏன்?

வட்டியை இஸ்லாம் தடுப்பது ஏன்?

இது போன்ற கேள்வி, அடிக்கடிச் சில சமுதாயக் கூட்டங்களின்போது  எழுப்பப் படுகின்றது.  ஏனெனில், வட்டியைக் குறிக்கும் அரபுச் சொல்லான 'ரிபா' என்பது வேறு; ஆங்கிலச் சொல்லான 'இன்டரெஸ்ட்' என்பது வேறு என்று சிலர் கருத்துக் கொண்டிருப்பதுதான்.  அதனால், இரண்டையும் வேறு படுத்தி, இன்று பரவலாக இருக்கும் வட்டி முறையை நியாயப் படுத்துகின்றார்கள்.

'ரிபா' எனப்படும் இந்த வட்டிதான் குர்ஆனாலும் ஹதீஸாலும் தடை செய்யப் பட்ட ஒன்று என்பதில் ஐயமில்லை.  குர்ஆன் வட்டியைப் படிப்படியாக நான்கு இறைவசனங்கள் மூலம் தடை செய்துள்ளது.  அவற்றுள்   30:39 என்ற முதல் வசனம் மக்காவில் அருளப்பட்டது.  எஞ்சிய மூன்று வசனங்களும் (4:161, 3:130-2, 2:275-81) மதீனாவில் அருளப்பட்டன.  

இவற்றுள் இறுதியான வசனம் (2:275-81) அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்நாள் இறுதிப் பகுதியில் இறங்கிற்று.  வட்டியை வாங்கித் தின்றவர்களை இவ்வசனங்கள் வன்மையாகக் கண்டித்ததோடு மட்டுமன்றி, அவர்கள் இறைவனுடனும் இறைத்தூதருடனும் போர் தொடுப்போர் என்றும் பறை சாற்றின.  இவ்வசனங்கள் வட்டிக்கும் வணிகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தன.  நிலுவையிலிருந்த வட்டிகள் அனைத்தையும் விட்டுவிடும்படியும், அதில் அவர்கள் ஈடுபடுத்திய முதலீட்டை மட்டும் எடுத்துக்கொள்ளும்படியும் முஸ்லிம்களை வலியுறுத்தின.  தம்மிடம் வட்டி வாங்கியவர்கள் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத சிரமமான நிலையில் இருந்தால், அதைக்கூட விட்டுக் கொடுக்கும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவான வார்த்தைகளால் வட்டியைத் தடை செய்துள்ளார்கள்.  வட்டி வாங்குபவர்களை மட்டுமன்றி, வட்டிக்கு அடிமைப்பட்டுக் கொடுப்பவர்களையும், வட்டிக் கணக்கு எழுதுபவர்களையும், அதற்குச் சாட்சியாக இருப்பவர்களையும் அதில் சபித்துள்ளார்கள்.
                          (ஆதார நூல்கள்: ஸஹீஹ் முஸ்லிம், திர்மிதீ, முஸ்னது அஹ்மத் )

வட்டியை, அது பாவம் என்று தெரிந்துகொண்டே, வாங்குபவர்கள் தம் சொந்தத் தாயை முப்பத்தாறு தடவை விபச்சாரம் செய்த குற்ற உணர்வைப் பெறுகின்றார் என்றும் நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
                                                       (ஆதார நூல்கள்:  இப்னு மாஜா, பைஹகீ)

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே குர்ஆனும் நபிவழியும் 'ரிபா' எனும் வட்டியைத் தடை செய்திருக்க, உலகின் பெரும்பாலான சமுதாயங்கள் முஸ்லிம்கள் உள்பட இன்னும் இதைப்பற்றிப் புரியாமல் தெளிவற்ற நிலையில் இருப்பது, அது சரியாக விளக்கப்படவில்லை எனக் கருதுவது வியப்பிலும் வியப்பாக உள்ளது!  எனவேதான், இந்த 'ரிபா' நம் முன்னோர்களால் எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டது என்பதை அதன் உண்மையான பொருளை விளக்கி நாம் அலச வேண்டியதாக இருக்கிறது. 

அரபுச் சொல்லகராதிகளை நமக்குத் தந்தவர்களான இப்னு மன்தூர் (லிசானுள் அரப்), அல்-ஜுபைதீ (தாஜுல் அருஸ்), ராகிப் அல்-இஸ்ஃபஹானி (அல்-முஃப்ரதாத்) ஆகியவர்களைச் சான்றுகளாகக் கொள்ளவேண்டிதாய் உள்ளது.  இவர்கள் அனைவரும் 'ரிபா' என்பது, 'கூடுதல்', 'மேலதிகமானது', 'விரிவடைவது' அல்லது 'வளர்ச்சியடைவது' போன்ற பொருள்களில் எடுத்தாள்கின்றனர்.  எனினும், எல்லாப் பொருள் வளர்ச்சிகளும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவையல்ல.  இதனடிப்படையில், இலாபம் என்பது, போட்ட முதலைவிடக் கூடுதலாக நமக்குக் கிடைப்பதாகும்; எனவே, அது நமக்குத் தடை செய்யப்பட்டதன்று.  அவ்வாறாயின், தடை செய்யப்பட்டது என்பது யாது?

இந்தக் கேள்விக்கு விடை தர முழு உரிமை பெற்ற மாமனிதர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவர் மட்டுமே எனக் கூறலாம்.  ஏனெனில், அவர்கள்தாம் கடன் அளித்தல் என்ற ஒன்றுக்காக ஏதேனும் அன்பளிப்பையோ, சேவையையோ, சலுகையையோ அடைவதைத் தடை செய்த பெருமான்.  அவர்கள்தான் சொன்னார்கள்:  "பிறருக்குக் கடன் வழங்குபவர், அதற்காக அன்பளிப்பு எதையும் பெறக் கூடாது."  நபிமொழிக் கலை வல்லுநர் இமாம் புகாரி (ரஹ்)அவர்கள் அறிவித்த இந்த நபிமொழியை இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் தமது 'அல்-முன்தகா' எனும் நூலில் எடுத்துரைக்கிறார்கள்.

இன்னொரு நபிமொழியும் இதனைத் தெளிவு படுத்துகின்றது:  "மற்றவருக்குக் கடனுதவி செய்யும் ஒருவர், அவருடன் வழக்கமாக நடந்துகொள்வது போலன்றி, அதற்குப் பகரமாகக் கடன் பெற்றவரிடமிருந்து ஓர் உணவையோ அவருடைய வாகனத்தின் மீது சவாரி செய்வதையோ பகரமாகப் பெறக்  கூடாது."  (சுனன் அல்பைஹகி, கித்தாபுல் புயூஉ)

மேற்கண்ட நபிமொழிகள், 'ரிபா' என்பதும், இன்று மக்களின் புழக்கத்தில் இருக்கும் 'வட்டி'  (interest) என்பதும் ஒன்றுதான் என்பதைத் தெளிவாக்குகின்றன.  இஸ்லாமிய வரலாற்றில் முன்னிலை வகிக்கும் பேரறிஞர்கள் பலரின் எழுத்துகளும் இக்கருத்தைத்தான் பிரதிபலிக்கின்றன.  இதற்கு மாறான கருத்தைத் தரும் குர்ஆன் விரிவுரைகளோ அரபி மொழி அகராதிகளோ இல்லை என்பதுவே உண்மை நிலை.  பேரறிஞரும் வான்மறை குர் ஆனின் விரிவுரையாளருமான அல்-குர்த்துபி (இறப்பு: ஹிஜ்ரி 671 / கி.பி. 1070) அவர்கள் தமது விரிவுரையில் குறிப்பிடுவதாவது: 

"கடனாகக் கொடுக்கப்பட்ட தொகையைவிடக் கூடுதலாகப் பெறும் சிறிய பெரிய தொகை எதுவாயினும், ஒரு பிடி வைக்கோலாயினும் ஒரு தானியத்தின் பகுதியாயினும், அது வட்டியேயாகும் என்ற நபியவர்களின் அறவுரையை  முஸ்லிம்கள் அனைவரும் ஒருமித்த அடிப்படையில் ஏற்றுக்கொள்கின்றனர்."

'லிசானுள் அரப்' எனும் அரபி அகராதியைத் தொகுத்த இப்னு மன்தூர் (இறப்பு: ஹிஜ்ரி 711 / கி.பி. 1311) அவர்கள் தெளிவாகக் குறிப்பிடுவதாவது:  ஒருவர் கொடுத்த கடனுக்காக எந்த ஒரு தொகையையோ வெகுமதியையோ ஒரு பிரதி உபகாரத்தையோ பெற்றுக்கொள்வதற்குப் பெயர்தான் தடை செய்யப்பட்ட வட்டியாகும்.  இக்கருத்தையே அறிஞர் ஃபக்ருத்தீன் அல்-ராஜி (தஃப்ஸீர் அல்-கபீர்), அபூபக்ர் அல்-ஜஸ்ஸாஸ் (அஹ்காம் அல்-குர்ஆன்) போன்ற அறிஞர்கள் வலியுறுத்திப் பேசுகின்றனர்.

எனவே, பண்டைக் காலம் முதல், 'ரிபா' என்ற சொல்லுக்கு, கடனுக்கான தவணையின் முடிவில் அந்தக் கடன் தொகையுடன் நிபந்தனையிட்டுச் சேர்த்துக் கொடுக்கும் தொகை என்றே பொருள் கொள்ளப்பட்டு வந்துள்ளது.  அண்மைக் காலத்தில் கூடிய அனைத்துலக இஸ்லாமியச் சட்ட வல்லுனர்களின் மாநாடுகளில் (பாரிஸ்-1951, கெய்ரோ-1965, 1985, மக்கா-1986) ஒருமித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தும் இதுவேயாகும்.

இவ்வாறான உறுதி மிக்க பெரும்பான்மைக் கருத்துகளுக்கு முன்னால், வட்டி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதன்று என்று ஓரிருவர் கருத்துத் தெரிவிப்பதால் உண்மைக்கு ஒன்றும் குறைவு வந்துவிடப் போவதில்லை.  இது போன்ற அங்குமிங்குமான 'புரட்சி' மொழிகளால் பொதுக் கருத்தில் எந்த விதப் பாதிப்பும் உண்டாகிவிடாது.  இவற்றின் காரணமாகவே சிலர் 'வட்டி' என்பதன் பொருள் யாது என்பதில் குழம்பி நிற்கிறார்கள்.  'ரிபா' எனும் சொல் 'ஷரீஆ'வில் இருவேறு பொருள்களில் கையாளப்படுவதுதான் இந்தக் குழப்பத்திற்குக் காரணம் எனலாம்.  அவ்விரண்டையும் அவற்றின் சரியான நிலையில் மக்கள் பொருத்திப் பார்க்காததும் மற்றொரு காரணமாகும். 


வட்டியை இஸ்லாம் தடுப்பது ஏன்?

இது போன்ற கேள்வி, அடிக்கடிச் சில சமுதாயக் கூட்டங்களின்போது  எழுப்பப் படுகின்றது.  ஏனெனில், வட்டியைக் குறிக்கும் அரபுச் சொல்லான 'ரிபா' என்பது வேறு; ஆங்கிலச் சொல்லான 'இன்டரெஸ்ட்' என்பது வேறு என்று சிலர் கருத்துக் கொண்டிருப்பதுதான்.  அதனால், இரண்டையும் வேறு படுத்தி, இன்று பரவலாக இருக்கும் வட்டி முறையை நியாயப் படுத்துகின்றார்கள்.

'ரிபா' எனப்படும் இந்த வட்டிதான் குர்ஆனாலும் ஹதீஸாலும் தடை செய்யப் பட்ட ஒன்று என்பதில் ஐயமில்லை.  குர்ஆன் வட்டியைப் படிப்படியாக நான்கு இறைவசனங்கள் மூலம் தடை செய்துள்ளது.  அவற்றுள்   30:39 என்ற முதல் வசனம் மக்காவில் அருளப்பட்டது.  எஞ்சிய மூன்று வசனங்களும் (4:161, 3:130-2, 2:275-81) மதீனாவில் அருளப்பட்டன.  

இவற்றுள் இறுதியான வசனம் (2:275-81) அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்நாள் இறுதிப் பகுதியில் இறங்கிற்று.  வட்டியை வாங்கித் தின்றவர்களை இவ்வசனங்கள் வன்மையாகக் கண்டித்ததோடு மட்டுமன்றி, அவர்கள் இறைவனுடனும் இறைத்தூதருடனும் போர் தொடுப்போர் என்றும் பறை சாற்றின.  இவ்வசனங்கள் வட்டிக்கும் வணிகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தன.  நிலுவையிலிருந்த வட்டிகள் அனைத்தையும் விட்டுவிடும்படியும், அதில் அவர்கள் ஈடுபடுத்திய முதலீட்டை மட்டும் எடுத்துக்கொள்ளும்படியும் முஸ்லிம்களை வலியுறுத்தின.  தம்மிடம் வட்டி வாங்கியவர்கள் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத சிரமமான நிலையில் இருந்தால், அதைக்கூட விட்டுக் கொடுக்கும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவான வார்த்தைகளால் வட்டியைத் தடை செய்துள்ளார்கள்.  வட்டி வாங்குபவர்களை மட்டுமன்றி, வட்டிக்கு அடிமைப்பட்டுக் கொடுப்பவர்களையும், வட்டிக் கணக்கு எழுதுபவர்களையும், அதற்குச் சாட்சியாக இருப்பவர்களையும் அதில் சபித்துள்ளார்கள்.
                          (ஆதார நூல்கள்: ஸஹீஹ் முஸ்லிம், திர்மிதீ, முஸ்னது அஹ்மத் )

வட்டியை, அது பாவம் என்று தெரிந்துகொண்டே, வாங்குபவர்கள் தம் சொந்தத் தாயை முப்பத்தாறு தடவை விபச்சாரம் செய்த குற்ற உணர்வைப் பெறுகின்றார் என்றும் நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
                                                       (ஆதார நூல்கள்:  இப்னு மாஜா, பைஹகீ)

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே குர்ஆனும் நபிவழியும் 'ரிபா' எனும் வட்டியைத் தடை செய்திருக்க, உலகின் பெரும்பாலான சமுதாயங்கள் முஸ்லிம்கள் உள்பட இன்னும் இதைப்பற்றிப் புரியாமல் தெளிவற்ற நிலையில் இருப்பது, அது சரியாக விளக்கப்படவில்லை எனக் கருதுவது வியப்பிலும் வியப்பாக உள்ளது!  எனவேதான், இந்த 'ரிபா' நம் முன்னோர்களால் எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டது என்பதை அதன் உண்மையான பொருளை விளக்கி நாம் அலச வேண்டியதாக இருக்கிறது. 

அரபுச் சொல்லகராதிகளை நமக்குத் தந்தவர்களான இப்னு மன்தூர் (லிசானுள் அரப்), அல்-ஜுபைதீ (தாஜுல் அருஸ்), ராகிப் அல்-இஸ்ஃபஹானி (அல்-முஃப்ரதாத்) ஆகியவர்களைச் சான்றுகளாகக் கொள்ளவேண்டிதாய் உள்ளது.  இவர்கள் அனைவரும் 'ரிபா' என்பது, 'கூடுதல்', 'மேலதிகமானது', 'விரிவடைவது' அல்லது 'வளர்ச்சியடைவது' போன்ற பொருள்களில் எடுத்தாள்கின்றனர்.  எனினும், எல்லாப் பொருள் வளர்ச்சிகளும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவையல்ல.  இதனடிப்படையில், இலாபம் என்பது, போட்ட முதலைவிடக் கூடுதலாக நமக்குக் கிடைப்பதாகும்; எனவே, அது நமக்குத் தடை செய்யப்பட்டதன்று.  அவ்வாறாயின், தடை செய்யப்பட்டது என்பது யாது?

இந்தக் கேள்விக்கு விடை தர முழு உரிமை பெற்ற மாமனிதர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவர் மட்டுமே எனக் கூறலாம்.  ஏனெனில், அவர்கள்தாம் கடன் அளித்தல் என்ற ஒன்றுக்காக ஏதேனும் அன்பளிப்பையோ, சேவையையோ, சலுகையையோ அடைவதைத் தடை செய்த பெருமான்.  அவர்கள்தான் சொன்னார்கள்:  "பிறருக்குக் கடன் வழங்குபவர், அதற்காக அன்பளிப்பு எதையும் பெறக் கூடாது."  நபிமொழிக் கலை வல்லுநர் இமாம் புகாரி (ரஹ்)அவர்கள் அறிவித்த இந்த நபிமொழியை இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் தமது 'அல்-முன்தகா' எனும் நூலில் எடுத்துரைக்கிறார்கள்.

இன்னொரு நபிமொழியும் இதனைத் தெளிவு படுத்துகின்றது:  "மற்றவருக்குக் கடனுதவி செய்யும் ஒருவர், அவருடன் வழக்கமாக நடந்துகொள்வது போலன்றி, அதற்குப் பகரமாகக் கடன் பெற்றவரிடமிருந்து ஓர் உணவையோ அவருடைய வாகனத்தின் மீது சவாரி செய்வதையோ பகரமாகப் பெறக்  கூடாது."  (சுனன் அல்பைஹகி, கித்தாபுல் புயூஉ)

மேற்கண்ட நபிமொழிகள், 'ரிபா' என்பதும், இன்று மக்களின் புழக்கத்தில் இருக்கும் 'வட்டி'  (interest) என்பதும் ஒன்றுதான் என்பதைத் தெளிவாக்குகின்றன.  இஸ்லாமிய வரலாற்றில் முன்னிலை வகிக்கும் பேரறிஞர்கள் பலரின் எழுத்துகளும் இக்கருத்தைத்தான் பிரதிபலிக்கின்றன.  இதற்கு மாறான கருத்தைத் தரும் குர்ஆன் விரிவுரைகளோ அரபி மொழி அகராதிகளோ இல்லை என்பதுவே உண்மை நிலை.  பேரறிஞரும் வான்மறை குர் ஆனின் விரிவுரையாளருமான அல்-குர்த்துபி (இறப்பு: ஹிஜ்ரி 671 / கி.பி. 1070) அவர்கள் தமது விரிவுரையில் குறிப்பிடுவதாவது: 

"கடனாகக் கொடுக்கப்பட்ட தொகையைவிடக் கூடுதலாகப் பெறும் சிறிய பெரிய தொகை எதுவாயினும், ஒரு பிடி வைக்கோலாயினும் ஒரு தானியத்தின் பகுதியாயினும், அது வட்டியேயாகும் என்ற நபியவர்களின் அறவுரையை  முஸ்லிம்கள் அனைவரும் ஒருமித்த அடிப்படையில் ஏற்றுக்கொள்கின்றனர்."

'லிசானுள் அரப்' எனும் அரபி அகராதியைத் தொகுத்த இப்னு மன்தூர் (இறப்பு: ஹிஜ்ரி 711 / கி.பி. 1311) அவர்கள் தெளிவாகக் குறிப்பிடுவதாவது:  ஒருவர் கொடுத்த கடனுக்காக எந்த ஒரு தொகையையோ வெகுமதியையோ ஒரு பிரதி உபகாரத்தையோ பெற்றுக்கொள்வதற்குப் பெயர்தான் தடை செய்யப்பட்ட வட்டியாகும்.  இக்கருத்தையே அறிஞர் ஃபக்ருத்தீன் அல்-ராஜி (தஃப்ஸீர் அல்-கபீர்), அபூபக்ர் அல்-ஜஸ்ஸாஸ் (அஹ்காம் அல்-குர்ஆன்) போன்ற அறிஞர்கள் வலியுறுத்திப் பேசுகின்றனர்.

எனவே, பண்டைக் காலம் முதல், 'ரிபா' என்ற சொல்லுக்கு, கடனுக்கான தவணையின் முடிவில் அந்தக் கடன் தொகையுடன் நிபந்தனையிட்டுச் சேர்த்துக் கொடுக்கும் தொகை என்றே பொருள் கொள்ளப்பட்டு வந்துள்ளது.  அண்மைக் காலத்தில் கூடிய அனைத்துலக இஸ்லாமியச் சட்ட வல்லுனர்களின் மாநாடுகளில் (பாரிஸ்-1951, கெய்ரோ-1965, 1985, மக்கா-1986) ஒருமித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தும் இதுவேயாகும்.

இவ்வாறான உறுதி மிக்க பெரும்பான்மைக் கருத்துகளுக்கு முன்னால், வட்டி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதன்று என்று ஓரிருவர் கருத்துத் தெரிவிப்பதால் உண்மைக்கு ஒன்றும் குறைவு வந்துவிடப் போவதில்லை.  இது போன்ற அங்குமிங்குமான 'புரட்சி' மொழிகளால் பொதுக் கருத்தில் எந்த விதப் பாதிப்பும் உண்டாகிவிடாது.  இவற்றின் காரணமாகவே சிலர் 'வட்டி' என்பதன் பொருள் யாது என்பதில் குழம்பி நிற்கிறார்கள்.  'ரிபா' எனும் சொல் 'ஷரீஆ'வில் இருவேறு பொருள்களில் கையாளப்படுவதுதான் இந்தக் குழப்பத்திற்குக் காரணம் எனலாம்.  அவ்விரண்டையும் அவற்றின் சரியான நிலையில் மக்கள் பொருத்திப் பார்க்காததும் மற்றொரு காரணமாகும். 


Saturday 20 July 2013

செல்வமும் வறுமையும்

'அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நிச்சயமாக நாம் ஆக்கியுள்ளோம். மேலும், நாம் அதிலுள்ள அனைத்தையும் நிச்சயமாக (ஒருநாள்) அழித்துப் பாலைநிலமாக்கி விடுவோம். (அல்-குர்ஆன் 018:007-008)

கடவுளை எல்லா மதத்தவர்களும் நம்புகின்றனர். ஆனால் மற்ற எந்தச் சமயத்தவர்களையும் விட முஸ்லிம்களின் கடவுள் நம்பிக்கை வலிமை மிக்கதாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. பக்திமான்களாக இருந்தவர்கள்கூட, தங்கள் வாழ்க்கையில் துன்பங்களைச் சந்திக்கும் போது நாத்திகர்களாகி விடுவதை மற்ற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாகக் காண்கிறோம். கடவுள் என அவர்கள் நம்புகின்ற கற்சிலைகளுக்கு முன்னால் நின்று கொண்டு அதைத் திட்டுகின்ற காட்சியையும் மண்ணை வாரி தூற்றுகின்ற காட்சியையும் பிற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாக காண் முடிகின்றது.

"கடவுளே! உனக்கு கண் இருக்கிறதா?" என்றெல்லாம் துன்பம் வரும் வேளையில் புலம்புகின்றவர்களையும் நாம் பார்க்கிறோம். கடவுளை நம்புகின்ற மற்ற மதத்தவர்களிடம் காணப்படும் இந்தக் கோளாறு முஸ்லிம்களிடம் காணப்படுவதில்லையே அது ஏன்? மற்ற மதத்தினர் தவறான அடிப்படையின் மீது தங்கள் நம்பிக்கை எனும் மாளிகைகளை எழுப்பிக் கொண்டதுதான் இதற்குக் காரணம். இவ்வுலகில் வாழ்கின்ற மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான செல்வச் செழிப்புடனும் வசதி வாய்ப்புகளுடனும் இருப்பதில்லை. சிலர் அதிகமான வசதிகளையும் பதவிகளையும் பெற்றுள்ளனர். பலர் இத்தகைய வாய்ப்பைப் பெற்றிருக்க வில்லை. இதற்குக் காரணம் என்ன என்பதை விளக்கும்போது மற்ற மதங்கள் செய்கின்ற தவறுகள்தாம் அடிப்படைக் கோளாறு எனலாம். "நீ கடவுள் மீது பக்தியுடன் இருந்தால் உனக்கு எண்ணற்ற வசதிகள் கிடைக்கும்" என்று ஏழைகளிடம் அம்மதங்கள் பேசுகின்றன. "சென்ற பிறவியில் நல்ல பக்திமானாக இல்லாததே நீ இப்போது ஏழையாக இருப்பதற்குக் காரணம்" என்றும் அவனுக்கு அறிவுரை கூறுகின்றன. இது போல் வசதி வாய்ப்புகளுடன் உள்ளவனை நோக்கி, "கடவுள் உன்மீது அன்பாய் இருக்கிறார். நீ நல்லவனாக இருப்பதால்தான் இந்த நிலையை அடைந்திருக்கிறாய்" என்றும் "சென்ற பிறவியில் நீ நல்லவனாக இருந்ததால் தான் இந்த உயர்ந்த நிலை கிடைத்தது" என்றும் பேசுகின்றன.

செழிப்பாய் இருந்தவனுக்கு ஒரு நட்டம் ஏற்பட்டால், "இவன் ஏதாவது தவறு செய்திருப்பான்" என்று கூறுவதும் அதனால்தான் இப்படி ஏற்பட்டது என்று பேசுவதும் இந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான். கீழ் நிலையில் இருந்த ஒருவனுக்கு நல்ல நிலை ஏற்பட்டால் அவன் கொடுத்து வைத்திருக்கிறான். இவன் புண்ணியம் செய்திருப்பான் என்று காரணம் கூறுவதற்கும் இந்த நம்பிக்கைதான் காரணம். இந்த நம்பிக்கை ஆழமாகப் பதிந்த பிறகு ஒரு கேடுகெட்டவன் உயர்ந்த நிலையை அடைவதைப் பார்க்கும் போதும் ஒரு நல்லவன் சொல்லொனாத் துன்பத்தை அடையும் போதும் கடவுள் நம்பிக்கையே அவன் உள்ளத்திலிருந்து விலகி விடுகிறது. மதத்தை வளர்ப்பதற்காகப் பொய்யான காரணங்களைக் கூறி நம்மை ஏமாற்றி விட்டனர் என்று அவனுக்குக் கோபம் ஏற்படுகின்றது. இதனால் தான் கடவுள்(?) மீதே மண்ணை வாரித் தூற்ற முடிகின்றது.

ஆனால் இஸ்லாம் பொய்யான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகள் எதனையும் அளிக்கவில்லை. எது உண்மையோ அதை மட்டுமே கூறுகின்றது. இவ்வுலகில் உள்ள ஏழைகள் பலரை நாம் பார்க்கிறோம். அவர்கள் அனைவரும் கெட்டவர்களாக இருப்பதில்லை. அதுபோல் அனைவரும் நல்லவர்களாகவும் இருப்பதில்லை. அவர்களது ஏழ்மை நிலைக்கும் அவர்களது பாவ புண்ணியத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பது கண்கூடாகத் தெரிகின்ற உண்மை.

அதுபோல் செல்வந்தர்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர். அவர்களின் செல்வ நிலைக்கும் பாவ புண்ணியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாமலிருப்பதைக் காண்கிறோம். இந்த நிதர்சனமான உண்மையை அப்படியே கூறுகின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே! இவ்வுலகில் நல்ல வசதி வாய்ப்புகளுடன் இருப்பதற்கும் நல்லவர்களாக இருப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வசதிகளைப் பெற்ற பிறகும் நீங்கள் நல்லவர்களாக வாழ்கிறீர்களா என்று சோதித்துப் பார்க்கவே இவை வழங்கப்பட்டுள்ளன. வசதிகள் வந்தபின் அதன் காரணமாக ஆணவம் பிடித்து அலைந்தால் நீ கெட்டவனாவாய்! அதை மற்றவருக்கு வாரி வழங்கி நற்செயல்களில் உன்னை ஈடுபடுத்திக் கொண்டால் நல்லவனாவாய் என்று இஸ்லாம் கூறுகின்றது. அதுபோல் நீ வசதி வாய்ப்புகளைப் பெறவில்லை என்பதால் நீ கெட்டவன் இல்லை. இந்த வறுமையின் காரணமாக நீ தடம் மாறுகிறாயா அல்லது தடம் புரளாமல் உறுதியாக நிற்கிறாயா? என்று சோதித்துப் பார்க்கவே இந்த நிலை என்று இஸ்லாம் கூறுகின்றது. செழிப்பு வறட்சி இரண்டுமே இரண்டு வகையான பரீட்சைகள் என்று இஸ்லாம் கூறுகின்ற காரணத்தினால்தான் முஸ்லிம்கள் எத்தகைய துன்பத்தை அடைய நேர்ந்தாலும் அவர்கள் அதைப் பொறுத்துக் கொள்கின்றனர். "கடவுளே உனக்கு கண்ணில்லையா?" என்று கேட்பதில்லை. இரண்டு நிலையில் எது ஏற்பட்டாலும் இரண்டும் சோதனைதானே தவிர நம்மை நல்லவன் கெட்டவன் என்று வழங்கப்படும் தீர்ப்பு அல்ல.

இனிமேல்தான் தீர்ப்பு வழங்கப் படவுள்ளது. அங்கே நல்ல தீர்ப்புப் பெறுவதற்காக வறட்சியிலும் செழிப்பிலும் நிலை குலையாமல் இருக்க வேண்டும் என்று உறுதியான அடிப்படையின்மீது முஸ்லிம்களின் நம்பிக்கை எழுப்பப் பட்டுள்ளது. அல் கஹ்ஃப் (குகை) அத்தியாயத்தின் ஏழாவது வசனமும் அந்த அடிப்படையைத் தான் சொல்லித் தருகின்றது. இப்பூமியில் உள்ள செழிப்புகள் யாவும் நீங்கள் நல்லவர்களாக நடக்கிறீர்களா என்று சோதித்துப் பார்ப்பதற்குத்தான் என்று கூறி முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பலமான அஸ்திவாரத்தின் மீது எழுப்புகின்றது. பின்வரும் வசனங்களும் இந்த வசனத்தின் விளக்கவுரைகளாகத் திகழ்கின்றன. 'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமையுடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது 'நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள்' (அல்குர்ஆன் 002:155-156). '(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும் உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப் படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும் இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடித் தருகின்ற) தீர்மானத்திற்குரிய செயலாகும்'. (அல்குர்ஆன் 003:186) 'ஒவ்வொர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும் நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப் படுவீர்கள்'. (அல்குர்ஆன் 021:035). வாழ்வில் இன்பம் வரும்போது அகமகிழ்ந்திருந்து, துன்பம் சூழும்வேளை இறைவனைக் குறைகூறக் கூடாது என்று கீழ்க்காணும் இரு வசனங்கள் முஸ்லிம்களை எச்சரிக்கின்றன:

'இன்னும்; மனிதர்களில் (உறுதியுடன் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான். அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கின்றான். ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின் அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கின்றான். இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான். இதுதான் தெளிவான நஷ்டமாகும்'. (அல்குர்ஆன் 022:011). 'இறைவன் மனிதனை கண்ணியப்படுத்தி, அவனுக்கு பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும்போது 'என் இறைவன் என்னைக் கண்ணியப் படுத்தியுள்ளான்' என்று கூறுகின்றான். எனினும் அவனுடைய வாழ்வாதாரத்தைக் குறைத்து அவனை (இறைவன்) சோதித்தாலோ அவன், 'என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்' என்று கூறுகின்றான்'. (அல்குர்ஆன் 089:015-016) எனவே செல்வமும் வறுமையும் சோதனைக்குத்தான் என்பதை உணர்ந்து சோதனையில் தேறிட வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

நன்றி : இஸ்லாமிய தஃவா

Saturday 29 June 2013

 (வட்டி தவிர்த்த  வாழ்வு) 

வட்டி தவிர்த்த வாழ்வு



இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள்

ஆளுக்கு ஆளு தருவதுண்டு
அசலுக்கு மேலும் வளர்வதுண்டு 
நாட்டுக்கு நாடு பெறுவதுண்டு 
அது இல்லையென்றால் எதுவுமில்லை !
தொழிலில்லை !முதலில்லை! கடனுமில்லை! 
சொல்லப் போனால் உலகமெங்கும் 
வரவில்லை! செலவில்லை! வழக்குமில்லை! 

அதன் ஆயுள் கெட்டி 
மெல்லப் பார்க்கும் எட்டி 
அது போடும் குட்டி 
அதன் பேர் வட்டி. 

உலகை  ஆசைதான் ஆட்சி செய்கிறது. அதிலும் பேராசை . பேராசைக்கு நமது கண்முன்னே  நடமாடும் எடுத்துக் காட்டாக இருப்பவர்கள் சில மூசாக்கள் அவர்களே வட்டி மூசாக்கள்.  தீய வழியில் கூட பணம் சேர்க்க வேண்டுமென்ற ஆசை தனி நபர்  தொடங்கி உலகம் தழுவிய காட்டுத் தீயாகப் பரவி விட்டது.  தீமை என்று தெரிந்தும் பல நாடுகளின் அரசுகளே இந்த வட்டி தொடர்பான கொடுக்கல் வாங்கல், லாட்டரி, குதிரைப் பந்தயம், மதுவணிகம் ஆகியவற்றில்  வரை முறை இன்றி ஈடுபடுகின்றன. இத்தகைய அரசுகளுக்கு சமூக நலனைவிட பணமே பெரிதாகத் தெரிவதால் சமூகத்தை சுரண்டி சமூகத்துக்கே இலவசம் என்ற பெயரில் திருப்பித் தருகின்றன . 
   
அரசாங்கமும் தனிமனிதனும்  வட்டியை ஒரு தீமையாகவே கருதுவதில்லை. ஆனால் சமுதாயத்தில் இது எவ்வளவு பெரிய சுயநலவாதிகளையும், பேராசைக்காரர்களையும், சகோதர மனப்பான்மை அற்றவர்களையும், பொருளாதார வீழ்ச்சியையும் உருவாக்குகிறது என்பதை யாரும் உணருவதில்லை ஏன்? அரசாங்கத்திற்கும் இது மிகப் பெரிய இழப்பாகும்.

சாதிகளில் பல சாதிகள் இருப்பதைப் போல் வட்டியிலும் பலவகை வட்டிகள் உள்ளன. கந்து வட்டி, மீட்டர் வட்டி, மில்லி வட்டி, நெல்லு வட்டி என்றெல்லாம் வட்டியை வகைப்படுத்தி வணிகம் செய்கிறார்கள். வட்டிக்கடை என்கிற போர்டு ஊரெங்கும் தொங்குகின்றன . அரை மணி நேரத்தில் நகைக் கடன் என்ற விளம்பரப் பதாகைகள் ஊரெங்கும் மாளிகை கட்டி முளைத்துவிட்டன. ஒரு சமுதாயமே வட்டிக்குக் கொடுத்து வாங்கும் சமுதாயம் என்று முத்திரை குத்தப் பட்டு இருக்கிறது. சில குடும்பங்களுக்கு வட்டிப் பணமே வருவாய் என்கிற நிலை இருக்கிறது. அரசுப்பணியோ அல்லது தனியார் பணியோ அவற்றில் இருந்து ஒய்வு பெற்றபின் வட்டிக்கு கொடுத்து வாங்கும் பலர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அன்றாடம் கூலி வாங்கிப் பிழைப்பு நடத்துபவர்கள் தங்களின் கூலியின்  பெரும் பகுதியை அன்றாடம் தின வசூல் வட்டிக் காரர்களிடம் கொடுத்துவிட்டு வாழ்க்கைச் செலவுகளுக்கு வழியற்று நிற்கிறார்கள். வட்டிப் பணத்தில் வாழ்க்கை நடத்துவோர்  அதுவும்  ஒரு வியாபாரம்தானே  என்று நியாயம் கற்பிக்கிறார்கள்.   

உலகின் வளர்ந்த நாடுகள் என்று கணக்கிடப்படுபவை பெருமளவில் உலக நிதி நிறுவனங்களில் இருந்து பெரும் பணத்தை வட்டியாகப் பெற்று தாங்கள் நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களில் ஈடுபடுத்துகின்றன. அவ்விதம் செய்கின்ற நேரங்களில் நிதி நிறுவனங்கள் இடும் அத்தனை கட்டளைகளுக்கும் அடிபணிந்து கையொப்பமிடுகின்றன. பல நேரங்களில் இத்தகைய உலக வங்கி போன்ற நிறுவனங்களின் கட்டளைகளுக்குப் பணிந்து தாங்கள் நாட்டின் அரசுப் பணிகளின் கட்டணத்தை கூட்டுகின்றனர். தமிழ்நாட்டில் பேருந்து கட்டணமும் மின்சாரக் கட்டணமும் உயர்த்தப் பட்டபோது இந்தக் காரணமும் கூறப்பட்டதை நாம் மறந்து இருக்க முடியாது. 

ஏன் வட்டி கூடாது என்று சொல்கிறோம்? இதற்கான பொருளாதாரக் காரணங்களும் சமூக அவலக்  காரணங்களும் நிறைய உள்ளன. பலவற்றைப் பட்டியல் இடலாம்.
  • வட்டித் தொழிலில் கடன் வாங்கியவன் இலாபமடைந்தாலும் நட்டமடைந்தாலும், கடன் கொடுத்தவன் ஒரு குறிப்பிட்ட இலாபத்திற்கு உரியவனாகிறான். ஆனால், வியாபாரம் அல்லது கைத்தொழில் அல்லது வேளாண்மை போன்ற விவகாரங்களில், கடன் வாங்கிய பணத்தை பயன்படுத்துவோனுக்குப் பெரும்பாலும் குறிப்பிட்ட அளவே இலாபம் அவன் கையில்  கிடைக்கிறது . பல நேரங்களில் வட்டிக்குக் கொடுத்தவனுக்கு வேளாண்மை  செய்த விளை பொருள்கள்கூட வட்டியாக சென்றுவிடுகிறது.   
  • வியாபார நடவடிக்கைகளில் விற்பவன் ஒரே ஒரு தடவைதான் இலாபம் பெறுகிறான். ஆனால், வட்டி சம்பந்தமான நடவடிக்கைகளில் கடன் கொடுத்தவன் தன் மூலதனத்தின் (அசல்) மீது தொடர்ச்சியாக இலாபம் பெற்றுக் கொண்டே இருக்கிறான். அந்தத் தொகை வட்டிக்கு மேல் வட்டியாகி அதிகரித்து இறுதியில் கடன்பட்டவனைப் பாழாக்கி விடுகிறது. நிலம் , தங்கம் ஆகியவற்றின் மீது கடன் வாங்கியவன் வட்டியின் அதிகரிப்பால் இறுதியில் தனது வாழ்வின் ஆதாரத்தையே இழந்துவிடுகிறான்.
  • வியாபாரக் கொடுக்கல் வாங்கலில் ஒருவன் தன் உழைப்பு, அறிவு இவற்றின் பலனாக இலாபத்தை அடைகிறான். ஆனால், வட்டி சம்பந்தமான தொழிலில் கடன் கொடுத்தவன் கடன்பட்டவனுடைய வருமானத்திலிருந்து கொள்ளை இலாபம் பெறுகிறான். மேலும், கடன் வாங்கியவனுக்கு இலாபம் கிடைத்தாலும் சரி, நட்டமேற்பட்டாலும் சரி, கடன் கொடுத்தவன் இலாபமே அடைகிறான். அப்படியே அவனுக்குக்குக் கிடைக்க வேண்டிய இலாபம் தாமதித்தால் இன்னும் அதிகமான இலாபம் வரவேண்டுமென்று கணக்கு வைத்து கழுத்தை நெறிக்கிறான்.
  • வட்டித்தொழில்  செய்வோரிடம் கஞ்சத்தனம் , சுயநலம், இரக்கமின்மை, பணத்தைப் போற்றிப் பூஜித்தல் முதலான தீமைகள் இயல்பிலேயே அவர்களின் இதயத்தில் குடிகொண்டுவிடுகின்றன . பச்சாதாபம் , அனுதாப உணர்ச்சி, பரஸ்பர உதவி செய்தல், கூட்டுறவு ஆகியவற்றையும் அது அழித்து விடுகிறது. மக்கள் பணத்தைச் சேர்த்துத் தங்கள் சொந்த நலத்திற்காக மட்டும் அதைச் செலவு செய்யும்படி தூண்டுகிறது. செல்வம் சமுதாயத்தின் எல்லாப் பாகங்களிலும் தடையின்றிச் சுற்றி வருவதைத் தடுக்கின்றது. 
  • ஏழைகளிடம் இருக்கும் சிறு செல்வமும் அவர்களிடமிருந்து  பணக்காரரிடம் செல்லும் ஒரு பாதைக்கு நான்குவழிப் பாதையை  உண்டாக்குகிறது. அதன் விளைவாக, சமுதாயத்தின் செல்வம் ஒரு சிலருடைய பணப்பெட்டிகளில் குவிந்து, இறுதியாக அது சமுதாயம் முழுவதையும் ஏற்றத்தாழ்வான  பொருளாதார வீழ்ச்சியிலும் அழிவிலும் கொண்டு சேர்த்து விடுகின்றது.
  • ஏராளமான பணம் படைத்தோர் அதை வட்டிக்குக் கடன் கொடுத்து, இன்னும் ஏராளமான பணத்தை அதிகரிக்கிறார்கள். இந்த அதிகரிப்பு முன் பணம் வாங்கிய  தொழிலாளிகளுக்குக் கொடுக்க வேண்டிய ஊதியத்தைக் குறைத்ததிலிருந்து கிடைத்தது. பல தொழிலாளர்கள் கொத்தடிமையாக வாழவேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வாறு பணக்காரர் பெரும் பணக்காரராகின்றார்கள். ஏழைகள் மேலும் மேலும் வட்டிக்குக் கடன் வாங்கி பரம ஏழைகளாகின்றார்கள். இறுதியாக சமுதாயம் ஆட்டம் கண்டுவிடுகிறது.
  • சட்டங்களின், அதிபதியான எல்லாம் வல்ல இறைவன்  வியாபாரத்தை  அனுமதித்து, வட்டியை  தடை செய்துள்ளான். அந்த இறைவனின்  வேதத்தில்  ஒன்று ஒளியுடனும், மற்றொன்று இருளுடனும் ஒப்பிடப்பட்டுள்ளது. வட்டிக்குக் கடன் கொடுத்தல் ஒரு தொழிலுமல்ல, வியாபாரமுமல்ல என்பது உண்மையிலும் உண்மையாகும். 
  • தனிக் கல்வியோ, தொழில் அறிவோ தேவையில்லாததால் அது ஒரு தொழில் அல்ல. அது ஒரு அலுவல். இதற்கான தகுதி காதில் ஒரு பென்சில்;  கையில் ஒரு நோட்டு; ஒலி எழுப்பக்கூடிய மணி வைக்கப் பட்ட சைக்கிள்.; இதயத்தில் இரக்கமின்மை; வாயில் வன்முறைப் பேச்சுக்கள்; தட்டிவைக்க சில அடியாட்கள்; சாரயவாடைவீசும் வாய்கள்.  அவ்வளவுதான்.  மனிதர்களுடைய துன்பங்களையும், துயரங்களையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அதனால் வளர்ச்சியடையும் இந்த வேலை எப்போதும் இழிவு. இந்த அலுவலில் ஈடுபட்டவர்கள் பொதுவாக இரக்கமற்ற இழிவானவர்கள். பணக் கஷ்டத்திலுள்ளோரை பலவகைகளிலும் துன்புறுத்தி, அவர்களுடைய வறுமையைப் பயன்படுத்தித் தங்கள் பணத்தை அதிகரித்துக்கொள்கிறார்கள். வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு சொத்துக்களை சூறையாடும் சூழ்ச்சிக்காரர்கள் தாலிக் கொடிகளைக் கூட சந்தியில் வைத்து வர வேண்டிய பாக்கிக்காக வன்முறையால் அறுத்து வசூலிக்கும் சாதி வலிமை உடையோர்  இந்தத் தொழிலை குலத்தொழிலாக செய்கிறார்கள். 
  • முதலாளித்துவ அமைப்பில் எந்த  சிரமமோ  அல்லது உழைப்போ இன்றி  மூலதனத்தின் அளவு பெருகுவதற்கு வட்டியே காரணமாக அமைந்துவிடுகிறது. 
  • சுருக்கமாக சொல்லப் போனால் , வட்டி எனும் கொடிய விஷம்  விளைவிக்கும்  நாசவேலைகள் கொஞ்சமல்ல.  அது இரக்கமின்மையை உண்டாக்குகின்றது. வீண் செலவையும் நீதி தவறிய வாழ்க்கையையும் விளைவிக்கின்றது. பேராசையைப் பெருக்குகின்றது. பொறாமைக்கு வழி வகுக்கின்றது. உலோபித்தனத்தை உற்சாகப்படுத்துகின்றது. வெட்கம் கெட்ட கேவலமான நிலைக்கு மனிதனைத் தாழ்த்தி விடுகின்றது. 
ஆனால், இறைவனின் மார்க்கமான இஸ்லாம்  மார்க்கம் ஒன்றே இந்த விஷச்செடியின் விளைவுகளை உலகுக்கு உணர்த்திக் காட்டி இந்த வட்டி வாங்கும் வழக்கத்தின் மேல்  ஒரு போர்ப்பிரகடனம் செய்து வட்டி என்பது  முற்றிலும் சட்ட விரோதமானதென்று பிரகடனம் செய்து தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. 

கிரேக்க, ரோம நாகரீகங்களில் மக்கள் வட்டியின் பளுவால் நசுக்கப்பட்டார்கள். ஆனால், தற்கால ஐரோப்பியப் பொருளாதார வல்லுநர்களைப் போன்றே, அந்த நாடுகளின் சட்டம் சமைத்தோர் அதை முற்றிலும் தடுக்கவில்லை. பைபிளில் வட்டி தடுக்கப்பட்ட போதிலும் யூதரல்லாதவர்களிடம் யூதர்கள் வட்டி வாங்குவதை அனுமதித்துள்ளது. இது ஏன் என்பதை நாம் சிந்தித்தால் விஷயங்கள் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். யூதர்கள் அல்லாதவர்களுக்கு வட்டிக்குக் கடனைக் கொடுத்துவிட்டு திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் அவர்கள் மீது அக்கிரமத்தையும் அநியாயத்தையும் அடக்குமுறையையும் ஏவி விடுவது யூதர்களின் பழக்கம். இதனால்தான் “ஒரு யூதனுடன் கை குலுக்கினால்,  உன் விரல்களை எண்ணிப் பார்த்துக்கொள்” என்கிற பழமொழி உலகில் உலவுகிறது. 

திருமறையாம் திரு குர் ஆன் ஒன்றே எல்லா  வகைகளிலும் வட்டியைத் திட்டவட்டமாகத் தடுத்து உலகம் முடியும் வரை புகழைப் பெற்றுக் கொண்டது.

 உலகமே வியந்து புகழும் மாபெரும் பெருமைக்குரிய அண்ணலார் நபி (ஸல்)  இந்த வட்டித் தொழில் செய்வோரால் ஏற்படும் துன்பத்தையும் அறிந்து கொண்டு, முஸ்லீம்களை  வட்டிக்குப் பணம் கொடுக்கலாகாதென்று உபதேசித்தார்கள். இறுதி மக்கா புனித யாத்திரை - ஹஜ் - செய்த புனிதமான தினத்தில், நபிபெருமானாரவர்கள் அறியாமைக் காலத்திலிருந்து கொடுக்கப்பட வேண்டிய வட்டிப் பணங்களெல்லாம் ரத்து செய்யப்பட்டன என்று விளம்பரம் செய்ததோடு, அதற்கு உதாரணமாகத் தங்கள் பெரிய தந்தை அப்பாஸ் அவர்களுக்கு  வர வேண்டிய வட்டித்தொகை   முழுதும் தள்ளுபடியாகிவிட்டதென்று அறிவித்தார்கள்.  

மிகக் கடுமையான சட்டங்களை இஸ்லாமியப் பொருளாதாரம் வட்டிக்கு எதிராக வழங்கி இருக்கிறது. நிச்சயமாக, இது பொருளாதாரச் சட்டங்களில் மிக்க அறிவு நிறைந்த சட்டமாகும் என உலகப் பொருளியல் வல்லுனர்கள் வியந்து கூறுகிறார்கள். . எந்தெந்த நாடுகளில் உயர்ந்த வட்டி விகிதம் கட்டுப்பாடு இல்லாமல் ஏற்பட்டுள்ளதோ அங்கெல்லாம் கைத்தொழிலிலும், வியாபாரமும் , மக்கள் நிலையும்   முன்னேற்றமடையவே  முடியாது என்று பொருளாதார நிபுணர்கள் இன்று  கூறுகின்றார்கள். 

அதுமட்டுமல்ல, இந்த வட்டியில் தொடர்புடைய எல்லோரும் - பத்திரம் எழுதுவோரும் - சாட்சிகளும் - அல்லாவின் சாபத்திற்குள்ளாவார்கள் எனவும் கூறியுள்ளார்கள். ரிபா - கடுமையான வட்டி மட்டும் தடுக்கப்பட்டுள்ளதெனவும், வேறுவிதமான முறைகள் அனுசரிக்கப்படலாம் என்பதும் இந்தக் கட்டளைகளின் பொருளல்ல. ஆனால், இந்தப் போதனைகளெல்லாம் முதலாளித்துவக் கொள்கையின் மனப்பான்மை, ஒழுக்க நிலைகள், கலாச்சாரம், பொருளாதார அமைப்பு ஆகியவற்றை அழிக்கவே வெளியிடப்பட்டன. மேலும் ஒரு புதிய அமைப்பை உண்டாக்கி, அதில் கஞ்சத்தனத்திற்குப் பதிலாகத் தானதருமம், சுயநலத்திற்கு பதிலாக ஈகை, இரக்கம்,  அனுதாபம், கூட்டுறவு, வட்டிக்கு மாற்றாக  ஜகாத், பாங்க் முறைக்குப் பதிலாக பைத்துல்மால் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கூட்டுறவுச் சங்கங்கள், இன்சூரன்ஸ் கம்பெனிகள், எதிர்கால நலனை நோக்கி ஏற்பட்ட சேமிப்பு முதலியன ஏற்படுத்தப்படும் சூழ்நிலைகளைத் தடுக்கவும் இந்தப் போதனைகள் குறிக்கோளாகக் கொண்டிருந்தன.

“Makkan verses deal with certain pillars of the Islamic economic system, like obligation of Zakah and prohibition of Riba. “ என்று கூறுகிறார் முனைவர் மன்சூர் காப் என்கிற இஸ்லாமிய பொருளியல்  அறிஞர். அதாவது மக்காவில் இறக்கப் பட்ட ஆயத்துகளே இஸ்லாமியப் பொருளாதாரத்துக்கு தூண்களாக நிற்கும் ஜகாத்தை கடமையாக்கி,  வட்டியை தடை செய்யும்    கருத்துக்களுடையவைகளாக  இறக்கப் பட்டன என்று கூறுகிறார். மேற்கோளாக ,

That which you lay out for increase  (by way of Riba) through the property of (other) people will have no increase with Allah; but that which you lay out for Zakah seeking the Countenance of Allah. (will increase); it is these who will get a recompense multiplied. (30:39)

மனிதர்களின் பொருள்களுடன் (சேர்ந்து) பெருக்குவதற்காக வேண்டி, வட்டிக்கு நீங்கள் எதனைக் கொடுக்கிறீர்களே, அது அல்லாஹ்விடம் (நன்மையைக் கொண்டு) அதிகரிக்காது. அல்லாஹ்வின் பொருத்தத்தை நீங்கள் நாடியவர்களாக ஜகாத்திளிருந்து நீங்கள் கொடுப்பதானது (அது அல்லாஹ்விடத்தில் பெருகும்)அத்தகையோர்தாம் (தம் நன்மைகளை) இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர். 

என்பதைக் காட்டுவதுடன்,

It is noteworthy that while providing early hints of the forthcoming economic system of Islam, these Makkan verses associate economic behavior with the doctrine of accountability before God on the Day of Judgement.  

The building of economic system was completed in Madinah with the establishment of state by the Prophet  Muhammed (PBUH). 

இஸ்லாத்தின் பொருளாதார சட்டம் என்னவாக இருக்கப் போகிறது என்பதன் ஆரம்பக் குறிப்பை மக்காவில் இறக்கப் பட்ட ஆயத்தில் கோடிட்டுக் காட்டிய இறைவன் மதினாவில் நிறுவப்பட்ட  இஸ்லாமிய ஆட்சியில் அமுல படுத்திக் காட்டவைத்தான்  என்றும் கூறுகிறார். 

(Relevance Definition and Methodolagy of Islamic Economics- Dr. Monzer Kahf).

வட்டி கொடுப்போரையும் வாங்கி முடிப்போரையும் பற்றி திருமறை மற்றும் நபி மொழிகள் செய்துள்ள போர்ப் பிரகடனங்களையும் அவை பற்றிய பொருளியல் அறிஞர்களின் குவியல் குவியலாகக் கொட்டிக் கிடக்கும் கருத்துக்களையும்  தொடர்ந்து பார்க்கலாம்.
...
இபுராஹீம் அன்சாரி


Saturday 6 April 2013

நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம்



‘அதிரை கர்ழன் ஹஸனா’வின் இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, அறங்காவலர்கள், ஆலோசகர்கள், மற்ற நிர்வாகிகள், மார்க்கச் சட்ட ஆலோசகர் அடங்கிய நிர்வாகக் குழுவின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் சென்ற 29/03/2013 அன்று கீழக் கடைத்தெருவில் அமைந்துள்ள அலுவலகத்தில் அதிகாலை 6.30 மணி முதல் நடைபெற்றது.

அறக்கட்டளையின் செயல்பாடுகள், கடன் கொடுப்பு-வரவு பற்றிய விவரங்கள், பரிசீலனையில் உள்ள கடன் விண்ணப்பங்கள், இன்னபிற விஷயங்கள் பேசுபொருள்களாக எடுத்துக்கொள்ளப்பட்டன.  விண்ணப்பதாரர்களின் தேவையையும் அறக்கட்டளையின் பொருள் இருப்பையும் கருத்தில் கொண்டு, சில விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அலுவலகப் பணியாளராக முஹம்மது உமர் என்பவர் ஏப்ரல் முதல் தேதி முதல் பணியாற்றுவார் என்று முடிவாயிற்று.  கடன் விண்ணப்பங்களைப் பெறுவது, அவற்றை நிர்வாகிகளின் பரிசீலனைக்குக் கொண்டுவருவது, கடன் ஒப்புதல் ஆன பின்னர் அவரவருக்குரிய காசோலைகளை ஒப்படைத்தல், கடன் வசூல், அவற்றைப் பதிவு செய்தல் முதலான பணிகள் பற்றி அவருக்கு விளக்கிக் கூறப்பட்டது.

கடந்த இரண்டாண்டுகள் அமைதியாகவும் ஆர்வத்துடனும் செயல்பட்ட இவ்வறக்கட்டளையின் அறங்காவலர்கள் மூவரின் பொறுப்புகளில் சிறிய மாற்றம் செய்து, அதனை ஆலோசனைக் குழுத் தலைவர் அறிவித்தார்.  அது வருமாறு:
·        தலைவர்        :  ஜனாப் மஹ்பூப் அலி
·        செயலாளர்    :  ஜனாப் அலி அக்பர்
·        பொருளாளர் :  ஜனாப் ஜமால் முஹம்மது

மற்ற துணை நிர்வாகிகள்:
·        துணைத் தலைவர்     :  ஜனாப் அஹ்மது அனஸ்
·        துணைச் செயலாளர் :  ஜனாப் அஹ்மது அஸ்லம்
·        துணைச் செயலாளர் :  ஜனாப் முஹம்மது அப்துல் காதர்
இந்தப் புதிய பொறுப்புகள் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

எதிர்வரும் ரமலானை ஒட்டி ஜக்காத் விநியோகத்திற்காக பொருளாதாரத்தில் நலிந்திருக்கும் நமதூர் ‘பிலால் நகர்’ மக்களைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவாயிற்று.  இந்த அமர்வில் கலந்துகொண்ட இருவர் ரூபாய் 50,000மும்  10,000மும் ஜக்காத்தாகத் தருவதாக வாக்களித்தது, குறிப்பிடத் தக்கதும் மகிழ்ச்சிக்குரியதுமாகும்.

கஃப்பாராவுடன் அமர்வு நிறைவுற்றது.