Friday 29 June 2012

பொறுப்பாளர்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இஸ்லாத்திற்குப் புறம்பான – அல்லாஹ்வினதும் முஹம்மது (ஸல்) அவர்களினதும் கோபத்தை வரவழைக்கும் கொடும் பாவமான வட்டியை ஒழிக்க, பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் சகோதரர்களும் போராடி வரும் சூழலில், ‘கர்ழன் ஹஸனா’ - வட்டியில்லா அழகிய கடன் திட்டம் என்ற அமைப்பு நமதூர் சமூக சேவகர்களால் சில மாதங்களுக்கு முன் அதிரையில் தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதன் நிர்வாகிகளை விரிவுபடுத்தும் விதமாக இன்று (13/05/2012) ஞாயிற்றுக் கிழமை தக்வாப் பள்ளி வளாகத்தில் கூடிய நிர்வாகிகள் கூட்டத்தில் கீழ்க் கண்டவாறு நிர்வாகிகள் விரிவு படுத்தப் பட்டனர்:

தலைவர் : M.C. அலி அக்பர்
துணைத் தலைவர் : S. அனஸ்
செயலாளர் : M.I. ஜமால் முஹம்மது
துணைச் செயலாளர் : S. அஸ்லம்
இணைச் செயலாளர் : S.H. முஹம்மது அப்துல் காதர்
பொருளாளர் : A. மஹபூப் அலி
துணைப் பொருளாளர்: அபுல்ஹசன் ஷாதலி (முஹம்மது)

கூட்டத்தில், முக்கியமாக இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் கந்து வட்டியை அறவே ஒழிப்பது என்றும், இது எந்த அமைப்பிற்கும் எதிரானதன்று என்றும் உறுதியாக  எடுத்துரைக்கப் பட்டது.

மாதாந்திரக் கூட்டம் எதிர்வரும் 25 -ஆம் தேதி காலை 7:00 மணிக்குத் தக்வா பள்ளி வளாகத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப் பட்டது.

இங்ஙணம்,

கர்ழன் ஹஸனா - அழகிய கடன் அறக்கட்டளை
அரசுப் பதிவு எண்: 231/2011

No comments:

Post a Comment